Saturday, April 7, 2007

கான் ஆர்ட்டிஸ்ட்ஸ் – ஏமாற்றுபவனுக்கே உலகம் சொந்தம் ?

"$@%^&*!%^$ நம்பவெச்சி கழுத்த அறுத்துட்டான் மச்சி… " – பாஸ்கர் சொல்லி முடிக்கிறப்ப தான் நான் எண்ட்ரி குடுத்தேன்… யார சொல்ரான்னு செரியா கெஸ் பன்ன முடியல…அவன் யூஸ் பண்ண பேட் வோர்ட்ஸ எல்லாம் பாத்தா என்ன இருக்காதுன்னு ஒரு நம்பிக்கை.. (ஹீஹீ …)

இருந்தாலும் கேக்கறதுக்கு முன்னால கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி பாத்துகலாம்னு யோசிச்சாக்கா… கடஸியா அவன ஏமாத்துனது….அவன் வண்டிய உசார் பண்ணி இன்னோரு பிரெண்டுக்கு (இண்டர்வியுக்கு டைம் ஆயிடிச்சி மச்சி … நைட்டெல்லம் பிரிப்பேர் பண்ணினேன்…) குடுக்க போயி அந்த நாயி இன்னான்னா பிகர பிக்கப் பண்ணிக்கினு ஊரெல்லாம் சுத்திட்டு வந்து எனக்கே அல்வா குடுத்தது ஞாபகம் வந்தது …

ஓக்கே…அது நடந்து கொஞ்சம் நாலாச்சி, என்னான்னு தான் கேப்போம்னு கேட்டேன் …

"டேய், இன்னாடா ஆச்சி?", நான்

"ஆமாண்டா ஏமாந்தத எத்தினிவாட்டி சொல்றது?", பாஸ்கர்

"சொல்டா டேய்…", மூஞ்ச ரொம்ப சோகமா வெச்சுகினு கேட்டேன்.

"ஒன்னும் இல்ல மச்சி", இது பாஸ்கர் கிட்ட உச்சு கொட்டி கதய ஏற்கனவே புல்லா கறந்துட்ட சரவணன். அவன் ஸ்டயில்ல சொல்ல ஆரம்பிச்சான் …

"இவனும் தொரயும் பைக்ல போயிருக்கானுங்கோ. நம்ம நூரடி ரோட்டு மொனயில எதோ ஒரு பெருசு பாவமா நின்னுகினு கைய காமிச்சு இருக்குது. ஒடனே நம்ம பசங்களும் பாவப்பட்டு நின்னு இன்னான்னு கேட்டுகிறானுங்கோ … பெருசு ஓன்னு கதரி அழுதுகீது… இன்னான்னு விசாரிக்கலாம்னு பாத்தா பெருசுக்கு தமிழ் தெரியாது போல …நம்ம இந்தி பண்டிட் (பண்டிடெல்லாம் ஒன்னும் இல்லீங்க. நம்ம கோஷ்டில கொஞ்சூண்டு இந்தி தெரிஞ்சவன்) தொரதான் டிரான்ஸ்லேட் பன்னி இருக்கான் … "

"பெருசுக்கு சொந்த ஊர் ராஜஸ்தானாம். தரயில போடற கார்பெட் இல்ல? அதெல்ல்லாம் செஞ்சி இங்க எக்ஸிபிஷனுக்கு விக்க வந்து இருக்குது …எக்ஸிபிஷன் தீ புடிச்சி எரிஞ்சி போனதுல சரக்கெல்லாம் அவுட்டாம். ஒரு ட்ரை சைக்கில்ல நாலு கார்ப்பெட் வெச்சிக்கினு இருந்து இருக்குது. கடசியா மிஞ்சினது இதுதான். ஊருக்கு போவ கூட காசு இல்ல இதுல ஒரு கார்ப்பெட் இருவது ஆயிரம் போவும். இதெல்லாம் பெரிய அரண்மனயில போடற குவாலிட்டி. இதுல ஒன்னாவது எடுத்துகினு பாதி காசாவது தந்தா ஊருக்கு போவுறதுக்காவது காசு கெடைக்கும்னு பெருசு ரொம்ப பிலடப் குடுத்து இருக்குது."

"நம்மாளுங்களும் பாவப்பட்டு இருக்கானுங்கோ. அப்பிடியே சூப்ப்ப்புரா பேரம் பேசி (?%#$%) ஒன்னு அஞ்சாயிரமுன்னு ஆளுக்கு ஒன்னு வாங்கிகின்னு வந்து இருக்கானுங்கோ …", மொகத்துல நமுட்டு சிரிப்பு.

"மச்சி… அவுனுக்குதான் இந்தி தெரியும் பாவப்பட்டு வாங்குனான், ஒன்னுமே புரியாத நீ இன்னாத்துக்கு வாங்குன? சைடுல வித்து துட்டு பாக்லான்னுதான? சும்மா இருக்காம பாஸ்கர போட்டு சீண்டுனான்.

"^%#@# ச்சே…உங்கிட்ட சொன்னன் பாரு …", பாஸ்கர் ரொம்ப சூடாயி சரவணன பாத்து பாய, நான் உள்ள பூந்து சமாதானம் பண்ண வேண்டுயதா போச்சு.
அந்த கார்பெட் ஒன்னு ஐனூரு கூட போவாது. பாஸ்கர பாத்து பாவபடுறதா இல்ல கோவ படுறதா?

ஏமாற்றுவது ஒரு கலை. ஏமாறுவது?

பெருசு போன்ற திறமையான ஆளுங்க உலகம் பூரா பல லெவல்ல இருக்காங்க. பல பேருக்கு தொழிலே ஏமாத்தி தின்னுறது தான்.

நம்ம இவுங்க மேல வெக்கிற நம்பிக்கை தான் இவங்களோட முதலீடு. அந்த நம்பிக்கய சம்பாதிக்க நம்ம வீக்னெஸ பக்காவா கண்டுபுடிச்சி நெத்தியடி அடிப்பாங்க.

இப்படி எதோ ஒரு விதத்துல எமாந்தவங்க பல பேர நம்ம எல்லாருக்கும் தெரியும்.

சமீபத்துல நண்பர் ஒருத்தர் நைஜீரியாவுல இருக்குற சிலபேர நம்பி பல ஆயிறம் டாலர்கள இழந்துட்டு நின்னப்போ மனசுக்கு ரொம்ப கஷ்டமா போயிடிச்சி. மனைவிய விட்டு பிரிஞ்சி ரொம்ப மனசு உடஞ்சி போயிருந்த அவுருக்கு பெண் உருவத்துல (இன்டெர்னெட் மூலம்) லவ்வுன்ற பேர்ல நல்லா அல்வா குடுத்து இருக்கானுங்கோ …

கொஞ்சம் கொஞ்சமா காசு வாங்கி பதினஞ்சாயிறம் போனப்புறம் தான் நண்பர் நம்மகிட்ட விசயத்த சொன்னாரு. நண்பர் ஒன்னும் லேசான ஆளு இல்ல. பல விஷயங்கள ஆழமா பேச கூடியவர். தன்னொடய கருத்த அடிச்சுபேசக்கூடியவர். பல தடவ அவருடய ஆழமான அறிவ பாத்து ஆச்சரியப்பட்டு இருக்கேன்.

இது போல நல்லா படிச்சி பல‌ வருஷம் அமெரிக்கவுல இருக்குற ஒருத்தர் கூட ஏமாற்றப்போ பாஸ்கரெல்லாம் பிஸ்கோத்துன்னு பட்டுச்சி …

இது போல ஏமாத்துறவங்கள பத்தி அண்ணன் கூகிள் கிட்ட கேட்டப்போ தெரிஞ்ச விசயங்க கீழ...

ஒரு கான் ஆர்டிஸ்ட்டொட‌ பொதுவான‌ குண‌ங்க‌ள்...

1. இளிச்ச‌வாய‌னை அடையாள‌ம் கண்டுக‌ர‌து.
2. இளிச்ச‌வாயன் ந‌ம்பிக்கையை ச‌ம்பாதிப்ப‌து.
3. இளிச்ச‌வாயன் கிட்ட‌ இருந்து எவ்வ‌ள‌வோ உருவ‌ முடியும்னு கணக்கு பன்னுரது.
4. சூப்பரா பில்டப் குடுத்து நம்ம இ.வாகிட்டயிருந்து ப‌ண‌த்த‌ உருவுர‌து.
5. சைல‌ன்ட்டா எஸ்கேப் அவ‌ர‌து.

"வ‌ண‌க்க‌ன்னே... ந‌ம‌க்கு மதுர பக்கம். வ‌ந்த‌ எட‌த்துல‌ வ‌ச்சிருந்த‌ பைய‌ யாரோ காலவாடிட்டாய்ங்க‌. வ‌ண்டி செல‌வுக்கு... ", இப்புடி தெனத்துக்கும் தினுசு தினுசா திரியிரவங்க...

"நரம்பு தளர்ச்சி ஆண்மை கோளாறு...", இப்புடி ப‌த்திரிக்க‌யில‌ விள‌ம்ப‌ர‌ம் குடுத்து அல்வா விக்கிர‌வுங்க...

இஷ்ட‌த்துக்கு உதார் உட்டு ப‌ண‌ம் க‌ற‌க்க‌ற‌ ஜோசிய‌ கார‌ங்க‌...

நாடி ஜோசிய‌ம்ன்ற‌ பேருல ரோட்டுக்கு ரோடு க‌ட‌ வெச்சு ஏமாத்துர‌வ‌ங்க‌...(என்னுடய கணிப்புல இது தான் பெஸ்ட் கான்... ந‌ம்ம‌ வாயில இருந்தே மேட்ட‌ற‌ க‌ற‌ந்து ந‌ம்ம காதுல‌யே பூ சுத்துற‌து...)

போலி சாமியாருங்க...

போலி பைனான்ஸ்காரைங்க‌...

"எங்க‌ நைனா எர‌னூரு கோடிய‌ பேங்க்ல‌ வெச்சுட்டு செத்து பூட்டாரு...அத‌ எடுத்து குடுக்குற‌துக்கு உங்க‌ உத‌வி தேவை. இதுக்கு ச‌ன்மானம் உங்குளுக்கு இருவ‌து கோடி..." ஈமெயில்ல அல்‌வா குடுக்குற‌வ‌னுங்க‌...


இப்ப‌டி ந‌ம்மள‌ ந‌ம்பி பெரிய‌ கூட்ட‌மே பொழ‌ச்சி கிட‌க்கு...உசாரா இருங்க‌ ம‌க்கா...


நீங்க யார்கிட்டயாவது அல்வா வாங்கன‌துன்டா?


~ மாற‌ன்

4 comments:

SurveySan said...

ஹாஹாஹா! :))

நைஜீரியா மேட்டர் படு திரில்லிங்கா இருக்கு கேக்கவே. தனிப்பதிவா முழு விவரமும் போடுங்க :) ( நண்பர் பாவம்தாம். ஆனா அவர் அனுபவம் நமக்கு தெரிஞ்சாதான, நாம உஷாரா இருக்க முடியும் :))

நாடி ஜோசியம், ராஜஸ்தான் தாத்தா எல்லாம் சரிதான். முக்கியமா, நம்ம அரசியல் தாதாக்கள வுட்டுட்டீங்களே.
ப்ராடு பண்ண மொத்த காபிரைட்டும் அவங்களோடதுதான் :)

நான் எப்படி ஏமாந்திருக்கேன்றத யோசிச்சு தனிப் பதிவா போடறேன். இதுவும் ஒரு சங்கிலி மாதிரி 'நான் ஏமாந்த கதைன்னு' எல்லாரும் போடலாமே ? :)))

மாறன் said...

ந‌ன்றி ச‌ர்வேச‌ன்...

ந‌ண்பரை‌ இத்தோட விட்டுடுர‌‌தே ந‌ல்ல‌துன்னு ப‌டுது...

"நான் ஏமாந்த‌ க‌தை" ந‌ல்ல‌ ச‌ங்கிலி தொட‌ருக்கான‌ டாபிதான். உங்க‌ சைட்டுல‌ போட்டு க‌ல‌க்குங்க...

~மாற‌ன்

கடோத்கஜன் said...

அல்வா..வா? சூப்பருங்கோ..

நானும் நல்ல ஓட்டல்னு பேரப் பாத்து உள்ள போயி, அல்வா வாங்கியிருக்கேன்..

யூர்கன் க்ருகியர் said...

பிச்சை எடுத்தானாம் பெருமாளு; அத பிடுங்கி தின்னானாம் அனுமாரு -ன்ற கதையா ,நானே வேலை தேடிய கஷ்ட காலத்தில் ஒரு பெருசு ரொம்ப பாவமா முகத்த வைத்துக்கொண்டு 75 ரூபாயை என்கிட்ட ஆட்டைய போட்டுட்டான்.
ஏமாற்ற பட்டேன் -னு தெரிஞ்சதும் ஒரு சாபம் விட்டேன் பாருங்க...கண்டிப்பா பலித்திருக்கும்னு நம்புறேன்! (ஏன்னா சிங்கிள் ரூபாவுக்கே சிங்கி அடித்த காலமது!)